மணி இரவு ஒன்பதரை. இப்பொழுதெல்லாம் சீக்கிரமே அசதி வந்து விடுகிறது. உறக்கமும் விழிப்புமில்லாத ஒரு மயக்க நிலை. நிகழ்காலத்திற்கும், கடந்தவைக்கும் பல நேரங்களில் வேறுபாடு தெரிவதில்லை. கீழ் அறையில் இருந்த இருக்கையிலே உட்கார்ந்தபடி, எதொ ஒரு காலத்தில். என் ஏழு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. அவள் என் கண்ணீன் மணி.ஆடி வரும் தேர். ஒரு தகப்பனுக்கு பாசமுள்ள மகள் அப்படித்தான் தெரிவாள். பொதுவாக எல்லா குழந்தைகளும் ஒன்றரை இரண்டு வயது வரை பெற்றோரே உலகம் என்று திரியும். பின்பு விளையாடும் தன் வயதொத்த பிள்ளைகள் முக்கியமாகி பெற்றோர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுவர். ஆனால் என் மகள் என்னை இன்னும் நேசித்தாள். நானே அவளுக்கு நடுநாயகம். என்னை ச்சுற்றித்தான் அவள் உலகம். வீட்டில் நுழைந்தவுடன் ஓடி வந்து காலைக்கட்டிக்கொள்வாள். பின் தூங்கும் வரை கோந்து போட்டது போல அப்படி ஒரு ஒட்டு. என் முகம் பார்க்கும் அவள் முகத்தில் விகசிக்கும் பாசம். மலர்ந்து அப்படி ஆசையுடன் பார்க்கும்.
என் சொரசொரத்த முகத்தில் அவள் முகத்தை அப்படி ஈஷிக்கொள்வாள். அப்பொழுது சத்தியமாக சொர்க்கம் நம்முன் சம்மணமிட்டு உட்காரும். பசி, தூக்கம் ஒன்றும் அண்டாது. கழுத்தை அவள் கை கட்டும் பொழுது மலர்போல. மாலை போல் ஆடும் உடல் ஒரு கனமும் இன்றி காற்று போல நிழல் போல என் மீது. சற்றே பிரிந்து என் முகம் பார்க்கும் அப்பொழுது அவள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சிக்கு இவ்வுலகையே விலையாகக்கொடுக்கலாம்.
வாழ்க்கை என் மகளைச்சுற்றி, என் மனைவி இதை ஒரு சாதாரண விஷயமாக பார்த்து புன்னகையுடன் எங்களை எங்கள் தனி உலகில் விட்டு விடுவாள்.
என் தொழில் ஒரு வியாபார சாம்ராஜ்யத்தில் முக்கியமான அங்கம். என் வேலையை எங்கிருந்து வேண்டுமானாலும் இருந்தும் செய்யலாம். தொழிலில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய தடங்கல்களை சரி செய்வது. பல ஊர்களில் இருக்கும் ஆலைகளிலும், வர்த்தக அலுவலகங்களிலும் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது.
அலுவல் சம்பந்தமாக ஊர்களுக்கு போனாலும் ஓரிரு இரவுகளில் முடித்து விட்டு வந்து விடுவேன். மகளின் ஒவ்வொரு நாளிலும் கூட இருக்க வேண்டுமென்ற ஆசை. என்னைப்பற்றி அலுவலகத்தில் நன்றாகத்தெரிந்ததாலும், என் திறமையை நன்கு உணர்ந்ததாலும் என்னை அவர்கள் கண்டு கொள்வதில்லை. தனியார் நிருவனங்களில் வேலை நடந்தால் போதும். எப்படி நடக்கிறது என்று என்பது அவர்களுக்கு கவலையில்லை.
என் குடும்பம் நான், மனைவி, மகள். மற்றவர்கள் ஊரில் இருக்கின்றனர். விவசாய குடும்பத்தில் வெளியே வந்த முதல் தலைமுறை. எனக்கு இருக்கும் மண்பாசம் என் தந்தையை விட குறைவு, மகளுக்கு அது அந்நியம். ஆகவே விடுமுறைக்குக்கூட ஊருக்கு போவதில்லை.
அன்று இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன். மூன்று தினங்களுக்கு முன் வீட்டை விட்டு போனவன் இரண்டு இரவுகள் கழித்து இன்றுதான் வருகிறேன். பம்பாய் சென்று அங்கு வேலையை முடித்து விட்டு காலைதான் வந்திறங்கினேன். வீட்டுக்குக்கூட வராமல் ராணிப்பேட்டை ஆலைக்கு சென்று விட்டேன். அங்கு இருந்தவர்கள் என்னைப்பற்றி தெரியாதவர்கள். நம்மாலே முடியாத காரியத்தை வெளியிலிருந்து வந்த இவனா செய்து விடுவான் என்ற இள்க்காரமும், தலைமை அலுவகத்தில்இருந்து வந்தவன் என்பதால் ஒரு பயத்துடனும் வளைய வந்தனர். என் தொழிலில் இது போல் எத்தனை பார்த்திருப்பேன்.
ஆலைக்குள் நுழைந்த நிமிடத்திலிருந்து ஒவ்வொரு இடுக்கிலும் நுழைந்து அலசி எங்கு பிழையென்று கண்டுபிடித்து அவர்களுக்கு சொன்னவுடன் வாய் பிளக்காத குறை. ஆலை மேளாளர்களை கலந்து எப்படி சரிசெய்வது என்று ஒவ்வொருவராக கலந்து பேசி அறிவுரை சொல்லி முடிக்கும் பொழுது மணி ஆறாகிவிட்டது. வீட்டுக்கு ஓடொடி வந்தேன்.
இன்று அவள் வரத்தாமதமாகிறது. அவளுக்குஅய்ந்து வயது ஆகும் பொழுதே அவளை மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ ஆக்க வேண்டுமென்று ஆசையில் பள்ளியைத்தாண்டி, தனிக்கல்வியும் தர ஏற்பாடு. அதை முடித்து வர இரவு ஒன்பதாகும். வழக்கமாக அவள் அன்னை அழைத்து வந்து விடுவாள். அவன் ஊரில் இருக்கும் வேளைகளில் விருப்பமாக செய்யும் காரியங்களீல் ஒன்று மகளை திரும்ப அழைத்துக்கொண்டு வருவது. சென்று அழைத்து வந்தால் உன்னும் அதிக நேரம் மகளுடன் இருக்கலாமே. தனிகல்விக்கு ஒரு வயதான வாத்தியார். ஓய்வு பெற்ற நல்லாசிரியர்.
இன்று திரும்ப தாமதமானதால் கூட செல்ல முடியவில்லை. மனைவி வீட்டை பூட்டி விட்டு போய்விட்டாள். மறு சாவி இருந்ததால் திறந்து சோபாவில் சாய்ந்து அவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.
கதவைத்திறந்து அவர்கள் வந்தவுடன் மகளை பார்த்தவுடன் எழுந்து ஆசையாக கைகளை நீட்டினேன். வழக்கமாக கைகளுக்குள் பாயும் என் மகள் பதறியது எனக்கு புதிது. கண்ணில் தெரிந்த அந்த பயம், வெறுப்பு, ரௌத்திரம் என்னை கொன்றது. என் மகளா? என்னைப்பார்த்தா? புரியாது என் மனைவியைப்பார்தேன். என் பார்வையைத்தவிர்த்து விட்டு மகளிடம் எதோ பேசிய படி மேலே சென்று விட்டாள்.
அவள் கீழே வரக்காதிருந்தேன். அப்படியே அசந்து விட்டேன்.
திடிக்கிட்டு எழுந்து நிகழ்காலத்திற்கு வந்தேன். இது நடந்து இருபது வருடம் ஆகியிருக்கும். அன்றிலிருந்து என் மகள் தேவதையிலிருந்து அரக்கியாக மாறினாள். தலைகீழாக மாறிய அவள் நடத்தை எங்கள் வீட்டை நரகமாக்கியது. படித்தாள் நன்றாக. தனிகல்விக்கு செல்ல மறுத்துவிட்டாள். என் திருப்திக்காக அந்த வாத்தியை உயிரைத்தவிர மற்ற எல்லாவற்றையும் எடுத்தும் என் ஆத்திரம் அடங்க வில்லை. அதனால் நடந்ததை அழித்துவிட முடியுமா?
மகளுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை, அதற்குள் மூன்று பேருடன் உறவு பின்பு பிரிவு. எத்தனையோ முறை, எத்தனையோ விதத்தில் அவளை அருகிப்பார்த்தேன். முதலில் ஒதுங்கி, ஒதுங்கிப்போனாள். கொஞ்சம் வளர்ந்தவுடன் கொத்தும் குதறும் வார்த்தைகள். தாங்காமல் என் மனைவி இறந்து விட்டாள். அதன் பின் கொஞ்ச நாள் வீட்டு க்குள் கைதி போல் கிடந்தாள். பின் வழக்கம் போல. செத்து விடலாம் என்று தோன்றும். மகள் தனியாகிவிடுவாளே என்ற ஒரே எண்ணம் என்னை ஒரு உயிருள்ள பிணமாக நடமாட வைத்தது.
மணி பதினொன்றரை. வீட்டு வாசலில் வண்டி சத்தம். அவளிடமுள்ள சாவி போட்டு திறந்து உள்ளே வந்தாள். நடையில் லேசான தள்ளாட்டம். என்ன குடித்தாளோ, எதை தின்றாளோ. முழுக்கையையும் மறைக்கும் மேல்சட்டை, கையில் அறுத்துக்கொண்ட தழும்புகளை மறைக்க. கால்சட்டை, ஏதோ கொஞ்சம் நகை. ஆதிவாசிகள் போல, வீட்டிலிருந்த என் மனைவி நகைகளை மனைவி உயிருடன் இருக்கும் பொழுதே மகள் எடுத்து விற்க ஆரம்பித்தவுடன் வங்கியில் வைத்து விட்டேன். சினிமா, மற்றும் விளம்பர படங்களில் ஏதோ செய்கிறாள். என்னிடம் பணம் கேட்பதில்லை.
அன்று உள்ளெ வந்தவள், என்னருகில் நின்றாள். கை என் தோளில் தலை குனிந்து ஏதோ சொல்லவோ கேட்கவோ ஆரம்பித்தாள். பின் கை மெதுவாக் என்னை விட்டு விலகியது.மௌனமாக விலகினாள்.
என் வாழ்வில் ஒரு திருப்பத்தின் ஆரம்பம்.
என் சொரசொரத்த முகத்தில் அவள் முகத்தை அப்படி ஈஷிக்கொள்வாள். அப்பொழுது சத்தியமாக சொர்க்கம் நம்முன் சம்மணமிட்டு உட்காரும். பசி, தூக்கம் ஒன்றும் அண்டாது. கழுத்தை அவள் கை கட்டும் பொழுது மலர்போல. மாலை போல் ஆடும் உடல் ஒரு கனமும் இன்றி காற்று போல நிழல் போல என் மீது. சற்றே பிரிந்து என் முகம் பார்க்கும் அப்பொழுது அவள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சிக்கு இவ்வுலகையே விலையாகக்கொடுக்கலாம்.
வாழ்க்கை என் மகளைச்சுற்றி, என் மனைவி இதை ஒரு சாதாரண விஷயமாக பார்த்து புன்னகையுடன் எங்களை எங்கள் தனி உலகில் விட்டு விடுவாள்.
என் தொழில் ஒரு வியாபார சாம்ராஜ்யத்தில் முக்கியமான அங்கம். என் வேலையை எங்கிருந்து வேண்டுமானாலும் இருந்தும் செய்யலாம். தொழிலில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய தடங்கல்களை சரி செய்வது. பல ஊர்களில் இருக்கும் ஆலைகளிலும், வர்த்தக அலுவலகங்களிலும் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது.
அலுவல் சம்பந்தமாக ஊர்களுக்கு போனாலும் ஓரிரு இரவுகளில் முடித்து விட்டு வந்து விடுவேன். மகளின் ஒவ்வொரு நாளிலும் கூட இருக்க வேண்டுமென்ற ஆசை. என்னைப்பற்றி அலுவலகத்தில் நன்றாகத்தெரிந்ததாலும், என் திறமையை நன்கு உணர்ந்ததாலும் என்னை அவர்கள் கண்டு கொள்வதில்லை. தனியார் நிருவனங்களில் வேலை நடந்தால் போதும். எப்படி நடக்கிறது என்று என்பது அவர்களுக்கு கவலையில்லை.
என் குடும்பம் நான், மனைவி, மகள். மற்றவர்கள் ஊரில் இருக்கின்றனர். விவசாய குடும்பத்தில் வெளியே வந்த முதல் தலைமுறை. எனக்கு இருக்கும் மண்பாசம் என் தந்தையை விட குறைவு, மகளுக்கு அது அந்நியம். ஆகவே விடுமுறைக்குக்கூட ஊருக்கு போவதில்லை.
அன்று இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தேன். மூன்று தினங்களுக்கு முன் வீட்டை விட்டு போனவன் இரண்டு இரவுகள் கழித்து இன்றுதான் வருகிறேன். பம்பாய் சென்று அங்கு வேலையை முடித்து விட்டு காலைதான் வந்திறங்கினேன். வீட்டுக்குக்கூட வராமல் ராணிப்பேட்டை ஆலைக்கு சென்று விட்டேன். அங்கு இருந்தவர்கள் என்னைப்பற்றி தெரியாதவர்கள். நம்மாலே முடியாத காரியத்தை வெளியிலிருந்து வந்த இவனா செய்து விடுவான் என்ற இள்க்காரமும், தலைமை அலுவகத்தில்இருந்து வந்தவன் என்பதால் ஒரு பயத்துடனும் வளைய வந்தனர். என் தொழிலில் இது போல் எத்தனை பார்த்திருப்பேன்.
ஆலைக்குள் நுழைந்த நிமிடத்திலிருந்து ஒவ்வொரு இடுக்கிலும் நுழைந்து அலசி எங்கு பிழையென்று கண்டுபிடித்து அவர்களுக்கு சொன்னவுடன் வாய் பிளக்காத குறை. ஆலை மேளாளர்களை கலந்து எப்படி சரிசெய்வது என்று ஒவ்வொருவராக கலந்து பேசி அறிவுரை சொல்லி முடிக்கும் பொழுது மணி ஆறாகிவிட்டது. வீட்டுக்கு ஓடொடி வந்தேன்.
இன்று அவள் வரத்தாமதமாகிறது. அவளுக்குஅய்ந்து வயது ஆகும் பொழுதே அவளை மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ ஆக்க வேண்டுமென்று ஆசையில் பள்ளியைத்தாண்டி, தனிக்கல்வியும் தர ஏற்பாடு. அதை முடித்து வர இரவு ஒன்பதாகும். வழக்கமாக அவள் அன்னை அழைத்து வந்து விடுவாள். அவன் ஊரில் இருக்கும் வேளைகளில் விருப்பமாக செய்யும் காரியங்களீல் ஒன்று மகளை திரும்ப அழைத்துக்கொண்டு வருவது. சென்று அழைத்து வந்தால் உன்னும் அதிக நேரம் மகளுடன் இருக்கலாமே. தனிகல்விக்கு ஒரு வயதான வாத்தியார். ஓய்வு பெற்ற நல்லாசிரியர்.
இன்று திரும்ப தாமதமானதால் கூட செல்ல முடியவில்லை. மனைவி வீட்டை பூட்டி விட்டு போய்விட்டாள். மறு சாவி இருந்ததால் திறந்து சோபாவில் சாய்ந்து அவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.
கதவைத்திறந்து அவர்கள் வந்தவுடன் மகளை பார்த்தவுடன் எழுந்து ஆசையாக கைகளை நீட்டினேன். வழக்கமாக கைகளுக்குள் பாயும் என் மகள் பதறியது எனக்கு புதிது. கண்ணில் தெரிந்த அந்த பயம், வெறுப்பு, ரௌத்திரம் என்னை கொன்றது. என் மகளா? என்னைப்பார்த்தா? புரியாது என் மனைவியைப்பார்தேன். என் பார்வையைத்தவிர்த்து விட்டு மகளிடம் எதோ பேசிய படி மேலே சென்று விட்டாள்.
அவள் கீழே வரக்காதிருந்தேன். அப்படியே அசந்து விட்டேன்.
திடிக்கிட்டு எழுந்து நிகழ்காலத்திற்கு வந்தேன். இது நடந்து இருபது வருடம் ஆகியிருக்கும். அன்றிலிருந்து என் மகள் தேவதையிலிருந்து அரக்கியாக மாறினாள். தலைகீழாக மாறிய அவள் நடத்தை எங்கள் வீட்டை நரகமாக்கியது. படித்தாள் நன்றாக. தனிகல்விக்கு செல்ல மறுத்துவிட்டாள். என் திருப்திக்காக அந்த வாத்தியை உயிரைத்தவிர மற்ற எல்லாவற்றையும் எடுத்தும் என் ஆத்திரம் அடங்க வில்லை. அதனால் நடந்ததை அழித்துவிட முடியுமா?
மகளுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை, அதற்குள் மூன்று பேருடன் உறவு பின்பு பிரிவு. எத்தனையோ முறை, எத்தனையோ விதத்தில் அவளை அருகிப்பார்த்தேன். முதலில் ஒதுங்கி, ஒதுங்கிப்போனாள். கொஞ்சம் வளர்ந்தவுடன் கொத்தும் குதறும் வார்த்தைகள். தாங்காமல் என் மனைவி இறந்து விட்டாள். அதன் பின் கொஞ்ச நாள் வீட்டு க்குள் கைதி போல் கிடந்தாள். பின் வழக்கம் போல. செத்து விடலாம் என்று தோன்றும். மகள் தனியாகிவிடுவாளே என்ற ஒரே எண்ணம் என்னை ஒரு உயிருள்ள பிணமாக நடமாட வைத்தது.
மணி பதினொன்றரை. வீட்டு வாசலில் வண்டி சத்தம். அவளிடமுள்ள சாவி போட்டு திறந்து உள்ளே வந்தாள். நடையில் லேசான தள்ளாட்டம். என்ன குடித்தாளோ, எதை தின்றாளோ. முழுக்கையையும் மறைக்கும் மேல்சட்டை, கையில் அறுத்துக்கொண்ட தழும்புகளை மறைக்க. கால்சட்டை, ஏதோ கொஞ்சம் நகை. ஆதிவாசிகள் போல, வீட்டிலிருந்த என் மனைவி நகைகளை மனைவி உயிருடன் இருக்கும் பொழுதே மகள் எடுத்து விற்க ஆரம்பித்தவுடன் வங்கியில் வைத்து விட்டேன். சினிமா, மற்றும் விளம்பர படங்களில் ஏதோ செய்கிறாள். என்னிடம் பணம் கேட்பதில்லை.
அன்று உள்ளெ வந்தவள், என்னருகில் நின்றாள். கை என் தோளில் தலை குனிந்து ஏதோ சொல்லவோ கேட்கவோ ஆரம்பித்தாள். பின் கை மெதுவாக் என்னை விட்டு விலகியது.மௌனமாக விலகினாள்.
என் வாழ்வில் ஒரு திருப்பத்தின் ஆரம்பம்.
No comments:
Post a Comment