zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: March 2013

Sunday, 24 March 2013

குளத்துடன் கோபித்துக்கொண்டு



நாட்டில் நடக்கும் பல விஷயங்களை தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் எனக்குள் எழும் எண்ணங்களை எழுதத் தோன்றும். ஆனால் என் எண்ணங்கள் பொதுக்கருத்துக்களுக்கு முரணாக இருப்பதால் எழுதுவதற்கு ஒரு தயக்கம் வருகிறது. இது பயமா? அல்லது சபை நாகரீகமா? தெரியவில்லை. 
ஆயினும் எழுத வேண்டுவது ஒரு தார்மீக கடமை என்று தோன்றும் பொழுது எழுதுவது ஒரு அவசியமாகிறது.
இரண்டு எதிர்வினைகள்.
சில மாதங்களுக்கு முன் விஸ்வரூபம் குறித்த ஒரு சர்ச்சை. இன்று அது கமல்ஹாசனுக்கு லாபமாக முடிந்த விஷயம். அன்று கமலுக்கு சேர்ந்த கூட்டத்தில் ஒரு பகுதியேனும் அன்றும் இன்றும் தண்ணீரின்றி நசியும் விவசாயத்திற்கு சேரவில்லை.
இன்று தமிழகத்தை உலுக்கும் தமிழ் ஈழம். அன்று தொப்புழ்கொடி உறவே என்று அவர்கள் அழைத்த பொழுது சேராத தமிழகம் இன்று அதை எடுத்தது ஏன். இன்று நடக்கும் போராட்டங்களில் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏன் முன் வைக்க வேண்டும். வாழும் தமிழ் மக்களை முன் வைத்தால் போராட்டம் மேலும் ஆதரவு பெருகும்.
இந்திய நடுவன் அரசு ராஜரீதியாக இப்பிரச்சினையை பார்க்கும் விதம் இது போல்தான் இருக்கும். 
தமிழ் ஈழம் மலர்ந்தால் தமிழ்நாட்டில் உள்ளோர் பிரிவினை கோர வழி பிறக்கும், பிறக்கலாம். மேலும் இலங்கை அரசு சீனாவின் பக்கம் சாய்ந்தால் அது இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும்.
மத்திய அரசின் மனதை மாற்ற ஒரே வழி. இவ்விரண்டு சந்தேகங்களுக்கும் உரிய உத்திரவாதம் கொடுப்பதே ஆகும். 
இது இல்லாமல் தொடரும் போராட்டம் பலனை அளிப்பது கடினம்.
இத்தலைப்புக்கு காரணம்- என் கருத்துக்கள் வெகுஜன கருத்துக்களுக்கு எப்பொழுதும் வேறுபடுவதால்