zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: October 2012

Sunday, 14 October 2012

சில அபத்தங்கள்

காலம் காலமாக நம் நாட்டில் எல்லோருக்கும் தேசத்தை உய்விக்க வேண்டுமென்ற கவலை வெகுவாக ஆட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் நாம் எல்லோரும் யாரோ ஒருவர் ஜனித்து வந்து செய்ய வேண்டுமென வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கு உள்ளே பார்த்து நாமே செய்ய வேண்டுமென்று ஏன் தோன்றவில்லை. எனக்கும் சேர்த்து?

Tuesday, 2 October 2012

நினைத்ததை எழுத இது வரை சோம்பேறித்தனமும் ennui யும் தடுத்துக்கொண்டிருந்தது.
இன்று மறுபடியும் எழுத ஆரம்பிகிறேன்.
என் மகளின் திருமணத்தை மிகுந்த செலவில் என் மனதிற்கு நிறைவாக நடத்தி விட்டு வரும் வழியில் என் இஷ்ட தெய்வத்தின் கோவிலில் வணங்க சென்ற பொழுது அங்கு ஒரு திருமணம். மணமகன், மணமகள், அவர்களுடன் இரு பெரியவர்கள், ஒரு சிறுமி, சுவாமி முன் மாலை மாற்றிக்கொண்டனர்.
மனதின் ஒரு மூலையில் வலித்தது. இந்த திருமணம் இன்னும் நிறைவைக்கொடுத்தது.