zNEvjjb-DUfexzIBNUrYwveacRI ராஜ்குமாரின் பக்கம்: பானை மண்ணோ பொன்னோ

Sunday, 21 August 2011

பானை மண்ணோ பொன்னோ



ஒரு நண்பரின் இடுகையை பார்த்தேன். அவரை ஒட்டியோ, வெட்டியோ எழுதுவது என் நோக்கமல்ல. அதை பார்த்தவுடன் எனக்கு தோன்றியதை எழுதுவதே என் நோக்கம்.
பானை வாங்குவது அதன் கொள்ளும் வசதிக்கே. அது மண்ணாயிருப்பதும், பொன்னாய் இருப்பதும் அவரவர் சௌகரியத்தைப்பற்றிய விஷயம்.
ஆனால் நம்மில் பலர் கொள்வதான அதன் முக்கிய நோக்கத்தை விட்டு விட்டு அதன் வெளிதோற்றமான சுவற்றை பார்க்கிறோம். அது மண்ணா, பொன்னா என்பது முக்கியமாகப்போய்விடுகிறது.
என்ன சொல்லப்ப்டுகிறதென்பது மறைந்துபோய் யார் சொல்கிறார்கள்மென்பது முக்கியமாகிவிடுகிறது.
யார் யார் வாய் கேட்பிலும் என்பது மறந்து போகிறது.
இன்றைய நாட்டு நிலையில் நாம் எடுக்கும் நிலைப்பாடுகள் நம் சொந்த சொந்த சிந்தனையிலிருந்து வராமல், யார் சொன்னதையோ, அல்லது சொல்வார்கள் என்ற நினைப்பிலிருந்தோ வருகிறது. மேலும் ஒருவரின் மதிப்பு அவர் என்ன செய்தார் என்பதல்லாமல், அல்லது அவர் சொன்னதை நன்றாக ஆராயாமல், அவர் சொன்னதாலேயெ வேத வாக்காகி விடுகிறது.
ஒரு உதாரணத்திற்கு "தீக்குள் விரலை விட்டால்" எப்படி சிந்தித்தாலும் அது எனக்கு இன்பமாகத்தோன்றவில்லை. என் மதிப்புக்குரிய பாரதி சொன்னதால் அதில் ஏதாவது இருக்குமோ என்று ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தேன். இன்நிலையில் நான் செய்ய விரும்புவது அவர் சொன்னதில் எனக்கு ஒப்பு இல்லையென்றே. அது இன்பமென்று சொல்வது எனது அறிவை கொச்சைப்படுத்துவதாகவே எனக்கு படுகிறது.
பாரதியை யே நான் கொஞ்சம் உரசிப்பார்த்தால் மற்றவரை நான் ஏன் அப்படியே விழுங்க வேண்டும்?
நான் சொல்வதை நீங்களும் கல்லில் உரசிப்பாருங்கள், அல்லது நிறுத்துப்பாருங்கள். நீங்கள் இதை அப்படியே விழுங்கி வேறு எங்கேனும் வாந்தி எடுப்பது உங்களுக்கோ, எனக்கோ பெருமையல்ல.

No comments:

Post a Comment